News
கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் (16) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,625.88 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 792.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.