News

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ” நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள் விலையைக் குறைத்தோம், மின்சார விலையைக் குறைத்தோம், அஸ்வெசும கொடுப்பனவை உயர்த்தினோம்.

அதுமாத்திரமின்றி ஜூன் மாதத்தில் இருந்து அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.

மன்னார் – இராமேஸ்வரத்திற்கு இடையில் மீண்டும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் புத்தளம் மன்னார் பாதையை இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

எனவே உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆணையைப் பெற்றுக்கொடுங்கள்.” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button