News

வெற்றிலையை பயன்படுத்தி இனிப்பு பண்டம் – இலங்கையில் கொண்டுவந்த புதிய திட்டம்

இலங்கையில் வெற்றிலையை பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெற்றிலையைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது என்று குறித்த நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு, சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதில், புகையிலைக்கு பதிலாக அதிக சர்க்கரை மற்றும் உணவு வண்ணம் சேர்க்கப்படுகிறது. வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வெற்றிலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இந்த இனிப்பை பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button