News

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டம் – ரணிலும் பங்கேற்பு

ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள பொருளாதார உரை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த உரையை ஆற்றுவதற்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து இடையூறுகள் இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்த தடைகளை முறியடிக்குமாறும் கூச்சலிட வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. பின்னர் கூட்டத்தில் இருந்து பிரதமர் வெளியேறியதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button