News

சிறுவர்களுக்கிடையில் பரவிவரும் நோய்த்தொற்று! சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

சிறுவர்களுக்கிடையில் தற்போது கண்சார்ந்த நோய்ஒன்று பரவி வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய்த்தொற்று தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் கூடிய தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் என்பன  காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவ்வாறானவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button