News

சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், சுப்பர் ஓவரில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றிக்கு தேவையான 9 ஓட்டங்களை 3 பந்துகளில் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button