News

அரிசி விலையில் சலுகை பற்றி வெளியான தகவல்.

அரிசி விலையில் சலுகைகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தினை அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு, அதிக வரி உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரிசி விலையில் சலுகைகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button