Uncategorized

இலங்கை வருகிறார் இந்திய தளபதி..!

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அழைப்பின் பேரில் இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே முதலாம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

1982ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக சேர்ந்த ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி, MiG – 21, MiG – 23MF, MiG – 29 and Su – 30MKI உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் 3,800 மணிநேரம் பறந்த அனுபவம் பெற்றவர்.

அவர் தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர், விமானிகள் கருவி மதிப்பீடு பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வாளர் உட்பட பல தகுதிகளுடன் மிகவும் திறமையான நிபுணராகவும் உள்ளார். செப்டெம்பர் 30, 2021 முதல், அவர் இந்திய விமானப்படையின் 27வது தலைமைத் தளபதியாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அவர் தங்கியிருக்கும் காலத்தில், அதிபர், பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவு பரிமாற்றம் பற்றிய விவாதங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளின் விரிவாக்கமும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button