News

சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் முழு ஆதரவு வழங்குவோம்: மகிந்த உறுதி

சிறந்த தலைவருக்கு நாம் எப்போதும் முழு ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்குத் தீர்வை வழங்கக் கூடிய எந்தவொரு நபருக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை மீண்டும் எப்போது பொறுப்பேற்கவுள்ளீர்கள்?’ என்ற கேள்விக்கு அவர் நேரடிப் பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button