News

நிதிப் பற்றாக்குறை – மூடப்படும் முக்கிய அரச நிறுவனங்கள்…!

பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுதன் காரணமாக நான்கு முக்கிய அரச நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், “மக நெகும” மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை இன்று காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘மக நெகும’ வீதி கட்டுமான உபகரண நிறுவனமானது முன்னர் இருந்த வீதி கட்டுமான அபிவிருத்தி நிறுவனத்தின் (RCDC) மறு உருவாக்கமாக இருந்தது.

குறித்த அரச நிறுவனத்தையும், அதனுடன் இணைந்த அரச நிறுவனத்தையும் பராமரிப்பதற்கான நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் மூடப்படுகின்றன.

அரச நிறுவன மறுசீரமைப்பின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் கலைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button