News

UK யில் மாணவர்களுக்கு விசா மறுப்பு!

பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச முதுகலை மாணவர்களில் குடும்ப உறுப்பினர்கள் சேர்வதைத் தடுக்கும் திட்டங்களுடன், பிரித்தானியாவில் குடியேறுவதைத் தடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகிறது.

கடந்த மிக சிறிய காலப்பகுதிக்குள் குடியேற்றியவர்களின் எண்ணிக்கையில் அதிக சாதனையைக் கண்ட பிறகு, பிரித்தானியா நிகர இடம்பெயர்வுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களுக்கமைய, 2022ஆம் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 504,000 பேர் பிரித்தானியாவிற்கு குடியேறியுள்ளனர்.
பிரெக்சிட்டுக்கு முந்தைய குடியேற்ற நிலைகளில் இருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பெரும்பாலான குடியேறியவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருகிறார்கள்.

அந்த நேரத்தில், உள்துறைச் செயலர் சுயெல்லா பிராவர்மேன், எல்லைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் “தோல்வியடைந்துவிட்டது” என்பதை ஒப்புக்கொண்டு, சிக்கலைச் சரிசெய்வதில் “முற்றிலும் உறுதியாக” இருப்பதாகக் கூறினார்.

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அதிகாரிகளால் கிட்டத்தட்ட 500,000 கற்கை விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவிட்க்குப் பிந்தைய இடம்பெயர்வு அதிகரிப்பிற்கு மாணவர்கள் முக்கிய காரணியாக உள்ளனர்.

மாணவர்கள், குறிப்பாக நைஜீரியா மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், தங்களுடன் குடும்பத்தை அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் மாணவர்களில் குடும்ப உறுப்பினர்கள் சேர்வதைத் தடுக்கும் திட்டங்களுடன், பிரித்தானியாவில் குடியேறுவதைத் தடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button