News

பூமியை தாக்கவுள்ள புதிய ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமை வரக்கூடும் என எரிப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

இது அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உலக சராசரி வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button