News

மீண்டும் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு தென் கொரியாவின் இன்சியான் நோக்கி புறப்படவிருந்த இலங்கை விமானம் தாதமடைந்துள்ளது.

நேற்று இரவு 08.50 மணிக்கு பயணிக்கவிருந்த விமானம் இன்று காலை 06.00 மணி வரை தாமதமாகியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-470 என்ற இலக்கம் கொண்ட இந்த விமானத்தில் இருந்து 46 பயணிகள் புறப்பட வேண்டியிருந்தது.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button