News

மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி – எச்சரிக்கும் அமைச்சர்..!

மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தந்திரிமலை பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதுடன், அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் செய்யப்படுகிறது.

நாட்டினுடைய பொருளாதாரம் தற்போது மீண்டும் நிமிர்ந்து வருகின்றது.

இருப்பினும் எதிர்காலத்தில் உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டுக்கு செல்லும் போது, இதனை விட அதிகரித்த வெற்றியை நோக்கி செல்ல முடியும்.

அதற்கு ஏற்ற வகையில் நாம் நிதிகளை கையாள வேண்டும்.” என நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button