News

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் விசேட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஓர்டர்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாளாந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button