News

கால்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

ronaldo new record

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார்.

இது அவருடைய 200 ஆவது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.

சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார்.

38 வயதான ரொனால்டோ கடந்த 2003 ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

சர்வதேச போட்டிகளில் மொத்தம் 123 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்த வீர்களின் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button