News

புத்தளம் Clean Nation அமைப்பின் தலைவர் சமூக ஆர்வளர் Isham Marikar மீது மிலேச்சத்தனமான தாக்குதல்!

புத்தளம் Clean Nation அமைப்பின் தலைவர் மற்றும் சமூக ஆர்வளருமான இஷாம் மரைக்கார் நேற்று (28.06.2023) அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டிற்கு முன்பாக இனந்தெரியாத காடையர்களினால் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாகவும் அவர் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தமது சமூக வலைத்தளம் மூலமாக அறிவித்திருந்தார்.
இளைஞர்களின் மத்தியில் ஒரு இளம் தலைவராக கருதப்பட்டு வந்தவர்.அதுமட்டுமல்லாமல் புத்தளம் மாவட்டத்தில் அதிகம் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவரும் ஆவார்.
இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலை புத்தளம் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button