News

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம்..!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரண்டாவது நாளாக நேற்று (30.06.2023) பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய நிதி குழு அங்கீகாரம் வழங்கியதாக அதன் உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா தலைமையிலான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க நிதி பற்றியக் குழு நேற்று முன்தினம் (29.06.2023) கலந்துரையாடியதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பூர்வாங்க முன்மொழிவுகளும் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ முன்மொழிவு நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button