News

சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்துடன் கைகோர்த்தது இலங்கை முதலீட்டு சபை

சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனமும், இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

இலங்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குதல் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக இந்த உடன்படிக்கை  கையொப்பமாகியுள்ளது.

இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விற்பனை என்பனவற்றுக்காக, இரு தரப்பினரால், 100 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், இந்த உடன்படிக்கையின் கீழ், சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்துடன், இயக்க உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button