News

வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை தாமதம் இன்றி பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திர அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளை படிப்படியாக அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த மாதம் சுமார் 30 ஆயிரம் பேர் இணைய வழி மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button