News

இ.போ.ச டிப்போ பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

டிப்போவின் பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டதன் காரணத்தால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் இன்று (31) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

அநுராதபுரம் மாவட்ட ஹொரவப்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்குள் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை, அநுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திடீரென முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கவிருந்த பயணிகள் பலரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button