News

நாடு தழுவிய ரீதியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க தயாராகும் சினோபெக்

இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து செயற்பாடுகளையும் சினோபெக் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் மத்தேகொடையில் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிலையம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமல்லாமல், சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினை அம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர் குறிப்பிட்டார்.

இதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான முன்மொழிவுக் கோரிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button