News

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகளுக்கு, ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நாளை(10) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுப்பர் 4 போட்டிக்களில் இரு அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையிலே ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின் போது மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து நாளை மறுதினமும்(11) போட்டி தொடரும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்துபடுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button