News

உர இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!

உர இறக்குமதி தொடர்பிலான கோரிக்கை ஒன்றினை விவசாய அமைச்சு விடுத்துள்ளது. அதாவது, உரங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையின்றி போதுமான தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து அங்கீகாரம் பெற்ற உர இறக்குமதியாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உர மானியத்துக்கு பதிலாக நிதி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு அவற்றை மானியமாக வழங்கும் செயற்பாட்டிலிருந்து தாம் விலகியுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button