News

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது, எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தை கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், மற்றும்  364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button