News

பரபரப்பாகும் ஆசியக் கிண்ண தொடர் – இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இலங்கை..!

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை(14) நடைபெறவிருக்கும் 2023 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 லீக் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

மேல் மாகாணத்தில் நாளை இரவும் பகலும் மழை பெய்யக்கூடும் என பல வானிலை திணைக்களங்கள் எதிர்வு கூறியுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுமென ஆசிய கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இலங்கை அணி அதிக நிகர ஓட்ட விகிதத்தைக் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button