News

புகையிரத இயக்குனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத இயக்குனர்களுக்கு புகையிரத திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அவர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

84 புகையிரத இயக்குனர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பும் நேற்று (12) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button