News

இலங்கை – இந்திய ஆசிய கிண்ண இறுதிப் போட்டி – வெளியான முக்கிய அறிவிப்பு.!

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறும் இறுதிப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டிக்கான பல நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், C,D மேல் மற்றும் கீழ் பிரிவுகளில் உள்ள அனைத்து நுழைவுச்சீட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், A மேல் மற்றும் கீழ், பிரிவு, B மேல் மற்றும் கீழ், மற்றும் பிரதான அரங்கத்தில் நுழைவுச்சீட்டு மட்டுமே வாங்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் இரசிகர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button