News

இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதிக்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (21) அதிபர் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாகவே 1,467 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன், தற்போது பேருந்துகள் மற்றும் டிரக்குகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொது போக்குவரத்துக்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் மோட்டார் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button