News

நிரந்தர வரிக் கொள்கை தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கை இல்லாதது முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஊக்கமின்மைக்கு காரணம் என அரசாங்கத்தின் நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மூன்று வர்த்தமானிகளின் உத்தரவுகளை ஆராய, குழு கூடிய போது இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், இந்த புதிய வரிவிதிப்புக்கான அடிப்படை, நோக்கம் மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அறிக்கையை வழங்குமாறு நிதி மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அரசாங்க நிதிக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், அரசாங்க நிதிக் குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் தரப்பினரை உரிய காலக்கெடுவிற்குள் அழைக்க அரசாங்க நிதி தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

மேலும், பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து பின்தொடர வேண்டியதன் அவசியத்தை அரசாங்க நிதிக் குழு வலியுறுத்தியுள்ளது என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கைக்கு வர்த்தக இருப்பு மிகுதியாக இருப்பதாக சர்வதேச உறவுகளுக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.

ஜி.எஸ்.பி பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட விளக்கக்காட்சியின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button