News

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதேவேளை, நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

அதன்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button