News

இந்தியாவில் இருந்து முட்டைகள் மூலம் இலங்கைக்கு வரும் ஆபத்து.

இந்திய முட்டைகள் மூலம் நிபா வைரஸ் இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் அபாயம் காரணமாக, இந்திய விலங்கினப் பொருட்களில் ஏற்படக்கூடிய நெருக்கடியில் இருந்து இலங்கைக்கு சாதகமான பலன் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

வைரஸ் தொடர்பில் அச்சமடைய வேண்டிய நிலையில் நாடு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடிந்தளவு அந்த வைரஸை பயன்படுத்தி ஏற்படுத்திக் கொள்ள கூடிய நம்மைகளை பெற்றுக் கொள்வதே சிறந்தது.

எதிர்காலத்தில் இலங்கையின் விலங்கினப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button