News

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்!

ஹைதராபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக IndiGo விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவை நவம்பர் 2, 2023 முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தி, இரு நகரங்களுக்கு இடையே நேரடி இணைப்பை வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் இண்டிகோ ஆகும்.

இவ்வாறு தொடங்கப்படும் சேவை சர்வதேச சந்தைகளில் இண்டிகோவின் மூலோபாய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் திறமையான இணைப்பை வழங்கும் நோக்கம் கொண்டதாகும்.

இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா இது தொடர்பில் கூறுகையில், “இந்த விமான சேவையின் அறிமுகம் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும்.

“தங்கள் பயணத்தைத் திட்டமிட விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். விமானம் 6E 1181 ஹைதராபாத்-கொழும்பு இடையேயான சேவை புதன்கிழமை தவிர, தினமும் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வந்து சேரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button