News

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணையில் இருந்து வணிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தயாராக உள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button