News

இலங்கைக்கு கிடைக்கவுள்ள தொடருந்து இயந்திரங்கள்: தொழில்நுட்பக் குழு இந்தியா பயணம்

ஏறக்குறைய 20 தொடருந்து இயந்திரங்களை இந்தியா – இலங்கைக்கு வழங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார தொடருந்துகளை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சேவையில் இருந்து நீக்கம் செய்யப்படும் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இயந்திரங்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்பக் குழுவொன்றை எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு அனுப்ப தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் பின்னரே குறித்த தொடருந்து இயந்திரங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button