News

உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 21ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை பிற்போடுமாறு நாடாளுமன்றில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்தநிலையில் குறித்த பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button