News

பல கோடி ரூபாவுக்கு தங்கத்தை அடகு வைத்துள்ள இலங்கையர்கள்

இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை மக்கள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வாழ முடியாத காரணத்தால் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாற்று நாணயங்களை வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்து மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். வழங்காவிட்டால் மீள முடியாத போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button