News

புதிய வரவு செலவுத் திட்டம்: அரச ஊழியர்கள் குறித்து வெளியான தகவல்

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான பல முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் என்பதுடன், சுகாதாரத்துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்களுக்கு அவர்களின் சேவையை 2 அல்லது 3 ஆண்டுகள் நீடிக்கும் விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button