News

அதிபர் வேட்பாளர் யார்..! ஐக்கிய மக்கள் சக்திக்குள் வெடித்தது மோதல்

அதிபர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், சரத் பொன்சேகாவும் அதிபர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக உள்ளனர். அடுத்த அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாச முன்மொழியப்பட்டாலும், சரத் பொன்சேகாவும் அதிபர் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் பேரணிகளை ஏற்பாடு செய்து வருகின்றார்.

அதன் காரணமாக சரத் பொன்சேகா தொடர்பில் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பல அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.

ஆனால் எந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் பொன்சேகா தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.இதனால் அந்த கட்சிக்குள் பெரும் மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button