News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவலானது அதிபர் ஊடகப் பிரிவினால் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும், அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக ஏனைய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button