News

உக்ரைனின் திடீர் தாக்குதல்: தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா

இஸ்ரேல் பலஸ்தீன் இடையிலான மோதல் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான போரும் தற்போது நீண்ட இழுபறியை சந்தித்து வருகின்றது.

இருதரப்பினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இருநாடுகளுக்கும் இராணுவ தளவாடங்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றை உலகநாடுகள் மறைமுகமாகவும் நேர்முகத்திலும் கொடுத்து உதவி செய்து வருவதால் போர் மேலும் வலுப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உக்ரைன் ராணுவத்தினர் கீவ்வில் இருந்து சரமாரியாக டிரோன்களை செலுத்தினர்.

எனினும் உக்ரைன் ராணுவத்தின் டிரோன்கள் வருகையை அறிந்த ரஷ்ய வான்பாதுகாப்பு தளவாடங்கள் அதனை மறித்து எதிர்த்தாக்குதல் நடத்தின.

இந்த சம்பவத்தில் 25 க்கும் அதிகமான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தநிலையில் உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button