News

பொதுமக்கள் முறைபாடுகளை 1977 க்கு செய்யலாம்!

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

22,000 சோதனைகளில் 3,151 அரிசி தொடர்பான சோதனைகளும் 510 சீனி தொடர்பான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் சோதனைகள் மற்றும் விசாரணைகளை தீவிரப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் முறைப்பாடுகள் தொடர்பான தகவல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தொலைபேசி இலக்கமான 1977 க்கு வழங்குமாறும் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button