News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியோரின் கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தவிரவும், நவம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு தீர்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிடும் போது அமைச்சகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (24) இணையவழி ஊடாக இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button