News

இஸ்ரேலுடனான விமான சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தம்.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இஸ்ரேலுக்கான அதன் விமானங்கள் மறு அறிவித்தல் வரை பறப்பில் ஈடுபடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தற்போதைய மோதல் நிலையை அடுத்து மேற்படி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். எமிரேட்ஸ் விமானங்களில் டெல் அவிவ் உடனான தொடர்பைக் கொண்ட வாடிக்கையாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை அவர்கள் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள், ”என்று விமான நிறுவனம் தனது இணையதளத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button