News

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவில் உள்ள குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் நிமோனியா குறித்து பல நிபுணர் குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளன.

இந்த சுவாச நோய் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் நோய் தீவிரமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, குளிர்காலம் வருவதால், நோயாளியின் நிலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

குளிர்காலம் தொடங்கியவுடன் பரவும் இதுபோன்ற அடையாளம் தெரியாத வைரஸ்களால் நாடு முழுவதும் தொற்றுநோய் நிலைமைகள் உருவாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, பல நிபுணர் குழுக்கள் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சீன சுகாதார திணைக்களம் இது தொடர்பான விரிவான தரவுகளை கோரியுள்ளதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சல் சுவாச நோய் பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலை, பயிற்சி வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் குழந்தை நல மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button