News

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : சீனாவிற்கு வழங்க யோசனை

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் நிர்மாணிப்பது தொடர்பான யோசனை இன்று (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதற்காக சினோபெக் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு தேவையான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்திற்காக இன்று யோசனை ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாளைக்குள் இதற்கான உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறோம் எனவும், இது நாட்டின் எரிசக்தி துறையில் முன்னெடுக்கப்படும் முக்கிய முதலீடாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 4.5 – 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்தால், அது நமது ஏற்றுமதி சார்ந்த நாட்டின் தேவைகளுக்கான முதலீடாக மாறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button