News

மூடப்பட்ட மற்றும் மூடப்படும் நிலையிலுள்ள வைத்தியசாலைகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மூடப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கை முழுவதும் தற்போது 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100 அரச வைத்தியசாலைகள் மூடப்படுவதை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளை சூழவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் GMOA உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணம், புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சர், தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து இந்தத் துறைக்குள் உள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button