News

வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு சிறந்த வாய்ப்பு: டென்மார்க்கின் புதிய அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் டென்மார்க் அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்போது, டிசம்பர் 17 ஆம் திகதி முதல் டென்மார்க்கில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறைகளின் கீழ் ஒரு குறுகிய காலத்திற்கு எவ்விதமான வேலை அனுமதிபத்திரம், வீடு ஆகியவை இல்லாமல் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிநபர்கள் டென்மார்க் நிறுவனத்தில் 180 நாட்களுக்குள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, இந்த சலுகை நிர்வாக பணியில் இருப்பவர்களுக்கும், உயர் மற்றும் நடுத்தர பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சரியான தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் சிக்கிக்கொண்டு இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button