News

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி குறித்து வெளியான தகவல்

திருத்த பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி நேற்றைய தினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்திருந்தார்.

இதன்மூலம், 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல், தொழிநுட்ப பிரச்சினை காரணமாக செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை,தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button