News

சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள தினசரி இரட்டை விமான சேவை

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு மற்றும் மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

மும்பையிலிருந்து வரும் பயணிகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், மெல்போர்ன் மற்றும் சிட்னி போன்ற இடங்களுக்கு இதன் மூலம் செல்லவும் வாய்ப்பளிக்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவிற்கு நிதி மற்றும் பொழுதுபோக்கு மூலதனத்திற்குச் செல்லும் பயணிகளின் வசதியைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டு இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்போது இந்தியாவில் டில்லி, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 100இற்கும் மேற்பட்ட விமானசேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button